தமிழ்நாடு நாள் விழாவையொட்டி பேச்சுப்போட்டி - பரிசுகளை தட்டிச்சென்ற மாணவ, மாணவியர்

அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. இதில் தனித்திறனை வெளிப்படுத்திய மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.


கோவை: தமிழ்நாடு விழா மற்றும் அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற 22 மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் காசோலைகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

தமிழ்வளர்ச்சித் துறையின் மூலம் நடத்தப்பட்ட தமிழ்நாடு நாள் விழா தொடர்பான கட்டுரை, பேச்சுப் போட்டி மற்றும் அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர்கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 22 மாணவ -மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார், பரிசுத்தொகைக்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர் புவனேஸ்வரி, மாணவ, மாணவியர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழ்வளர்ச்சித் துறையின் மூலம் கடந்த மாதம் 12ம் தேதிராசவீதியில் உள்ள அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்ற கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 6 மாணவ, மாண ணவியர்களுக்கும் மற்றும் அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு 13-07-2023 மற்றும் 14-07-2023 ஆகிய நாள்களில் நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 18 மாணவ - மாணவியர்களுக்கும் என மொத்தம் 22 மாணவ மாணவியர்களுக்குக் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர்வழங்கிச் சிறப்பித்தார்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,000ம், மூன்றாம் பரிசாக ரூ.5000 க்கான காசோலை. பாராட்டுச் சான்றிதழ்கள்வழங்கப்பட்டன.



இதேபோல், அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000-க்கான காசோலைகளையும், இரண்டாம் பரிசாக ரூ.3,000ம், மூன்றாம் பரிசாக ரூ.2,000மும், பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பரிசு 2 போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட 4 நபர்களுக்கு ரூ 2000-க்கான காசோலைகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும், சிறந்த வரைவுகள் குறிப்புகள் எழுதியமைக்காக அரசுப் பணியாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.3000ம், இரண்டாம் பரிசாக ரூ.2000-க்கான காசோலையை இரண்டு நபர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...