தமிழ்நாடு நாள் விழாவையொட்டி பேச்சுப்போட்டி - பரிசுகளை தட்டிச்சென்ற மாணவ, மாணவியர்

அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. இதில் தனித்திறனை வெளிப்படுத்திய மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.


கோவை: தமிழ்நாடு விழா மற்றும் அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற 22 மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் காசோலைகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

தமிழ்வளர்ச்சித் துறையின் மூலம் நடத்தப்பட்ட தமிழ்நாடு நாள் விழா தொடர்பான கட்டுரை, பேச்சுப் போட்டி மற்றும் அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர்கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 22 மாணவ -மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார், பரிசுத்தொகைக்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர் புவனேஸ்வரி, மாணவ, மாணவியர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழ்வளர்ச்சித் துறையின் மூலம் கடந்த மாதம் 12ம் தேதிராசவீதியில் உள்ள அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்ற கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 6 மாணவ, மாண ணவியர்களுக்கும் மற்றும் அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு 13-07-2023 மற்றும் 14-07-2023 ஆகிய நாள்களில் நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 18 மாணவ - மாணவியர்களுக்கும் என மொத்தம் 22 மாணவ மாணவியர்களுக்குக் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர்வழங்கிச் சிறப்பித்தார்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,000ம், மூன்றாம் பரிசாக ரூ.5000 க்கான காசோலை. பாராட்டுச் சான்றிதழ்கள்வழங்கப்பட்டன.



இதேபோல், அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000-க்கான காசோலைகளையும், இரண்டாம் பரிசாக ரூ.3,000ம், மூன்றாம் பரிசாக ரூ.2,000மும், பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பரிசு 2 போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட 4 நபர்களுக்கு ரூ 2000-க்கான காசோலைகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும், சிறந்த வரைவுகள் குறிப்புகள் எழுதியமைக்காக அரசுப் பணியாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.3000ம், இரண்டாம் பரிசாக ரூ.2000-க்கான காசோலையை இரண்டு நபர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...