நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 78வது நினைவு நாள் - இரத்ததான கழகம் சார்பில் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை!

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த கூடலூர் கவுண்டம்பாளையம் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்-ன் 78 வது நினைவு நாளையொட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ரத்ததான கழகம் சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு தலைமையில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



கோவை: நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நினைவு நாளை ஒட்டி கோவையில் ரத்ததான கழகம் சார்பில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்-சின் 78 வது நினைவு நாளையொட்டி நாடு முழுவதும் அவரது திரூஉருவச் சிலைகளுக்கு பலர் மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள கூடலூர் கவுண்டம்பாளையத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்-சின் 78 வது நினைவு நாளை ஒட்டி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ரத்ததான கழகம் சார்பில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு தலைமை தாங்கி சுபாஸ் சந்திரபோஸ் வீரவரலாறு குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்து நேதாஜியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.



தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



மேலும் அருகில் இருந்த மகாத்மா காந்தி மற்றும் காமராஜர் திருவுருவ சிலைகளுக்கும் மாலைகள் சூடி மரியாதை செய்தனர்.



இந்நிகழ்ச்சியில் நகராட்சி துணைத் தலைவர் ரதி ராஜேந்திரன், கவுன்சிலர்கள் அகில் சந்திரசேகர், பேங்க் முருகேசன், துரை செந்தில்குமார், பாலசுப்பிரமணியம், ஜெனார்த்தனன், ரேகா, கூடலூர் நகராட்சி அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் உமா, பள்ளி கல்விக்குழுவை சேர்ந்த பொன் மாடசாமி, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ரத்ததான கழகத்தை சேர்ந்த கே.ஆர்.செல்வம், கே.ராஜகோபால், பி.முத்துராஜா, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் நண்பர்கள் நற்பணி மன்ற செயலாளர் ஆனந்தபாபு, படையப்பா மற்றும் ஊர் பெரியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...