மாவீரன் ஒண்டிவீரன் நினைவு நாள் - உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே தேசிய தாழ்த்தப்பட்டோர் மக்கள் நல உரிமை இயக்கத்தின் சார்பாக மாவீரன் ஒண்டிவீரன் 252 வது நினைவு நாளை முன்னிட்டு மாவீரர் ஒன்டிவீரனின் திருவுருவ படத்திற்கு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.



கோவை: மாவீரன் ஒண்டிவீரனின் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. அப்போது, அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே தேசிய தாழ்த்தப்பட்டோர் மக்கள் நல உரிமை இயக்கத்தின் சார்பாக மாவீரன் ஒண்டிவீரன் 252 வது நினைவு நாளை முன்னிட்டு மாவீரர் ஒன்டிவீரனின் திருவுருவ படத்திற்கு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்கு அரிசி, சேலை மற்றும் சார்ட்டுகள் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினர்.



தேசிய தாழ்த்தப்பட்டோர் மக்கள் நல உரிமை இயக்கத்தின் சார்பாக மாவீரன் ஒண்டிவீரன் 252 வது நினைவு நாள் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகில் தேசிய தாழ்த்தப்பட்டோர் மக்கள் நல உரிமை இயக்கத்தின் நிறுவன தலைவர் ஆ.மருதாசலம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மாவீரர் ஒன்டிவீரனின் திருவுருவ படத்திற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட செயலாளருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்நிகழ்ச்சியில் திராவிட சிறுத்தைகள் கட்சி தலைவர் பருவாய் சாமிநாதன் கலந்து கொண்டு ஒண்டிவீரன் வரலாற்றை மக்களுக்கு எடுத்துரைத்தார்.

அதை தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்கு அரிசி, சேலை மற்றும் சார்ட்டுகள் உள்ளிட்ட நலத்திட்டங்களை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்கம் பொதுச்செயலாளர் VPM பன்னீர் மற்றும் தேசிய தாழ்த்தப்பட்டோர் மக்கள் நல உரிமை இயக்கத்தின் பொதுச்செயலாளர் சந்திரன் மற்றும் 100 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...