மாவீரன் ஒண்டிவீரன் நினைவு நாள் - உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே தேசிய தாழ்த்தப்பட்டோர் மக்கள் நல உரிமை இயக்கத்தின் சார்பாக மாவீரன் ஒண்டிவீரன் 252 வது நினைவு நாளை முன்னிட்டு மாவீரர் ஒன்டிவீரனின் திருவுருவ படத்திற்கு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.



கோவை: மாவீரன் ஒண்டிவீரனின் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. அப்போது, அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே தேசிய தாழ்த்தப்பட்டோர் மக்கள் நல உரிமை இயக்கத்தின் சார்பாக மாவீரன் ஒண்டிவீரன் 252 வது நினைவு நாளை முன்னிட்டு மாவீரர் ஒன்டிவீரனின் திருவுருவ படத்திற்கு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்கு அரிசி, சேலை மற்றும் சார்ட்டுகள் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினர்.



தேசிய தாழ்த்தப்பட்டோர் மக்கள் நல உரிமை இயக்கத்தின் சார்பாக மாவீரன் ஒண்டிவீரன் 252 வது நினைவு நாள் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகில் தேசிய தாழ்த்தப்பட்டோர் மக்கள் நல உரிமை இயக்கத்தின் நிறுவன தலைவர் ஆ.மருதாசலம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மாவீரர் ஒன்டிவீரனின் திருவுருவ படத்திற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட செயலாளருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்நிகழ்ச்சியில் திராவிட சிறுத்தைகள் கட்சி தலைவர் பருவாய் சாமிநாதன் கலந்து கொண்டு ஒண்டிவீரன் வரலாற்றை மக்களுக்கு எடுத்துரைத்தார்.

அதை தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்கு அரிசி, சேலை மற்றும் சார்ட்டுகள் உள்ளிட்ட நலத்திட்டங்களை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்கம் பொதுச்செயலாளர் VPM பன்னீர் மற்றும் தேசிய தாழ்த்தப்பட்டோர் மக்கள் நல உரிமை இயக்கத்தின் பொதுச்செயலாளர் சந்திரன் மற்றும் 100 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...