வானத்தில் பல ஸ்டார்கள் ஜொலிக்கலாம், பூமியில் ஒரே ஸ்டார் நம்ம சூப்பர் ஸ்டார் - கோவையில் போஸ்டர் ஒட்டிய ரஜினி ரசிகர்கள்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடிகர் ரஜினி ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் வானத்தில் பல ஸ்டார்கள் ஜொலிக்கலாம், ஆனால் பூமியில் ஜொலிப்பது ஒரே ஸ்டார் நம்ம சூப்பர் ஸ்டார் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.



கோவை: நடிகர் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் சக்கைபோடு போக்குவருகிறது. இதனால் குஷியான அவரது ரசிகர்கள் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

நடிகர் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் பெரும் வெற்றி பெற்று வசூலில் சாதனையும் படைத்து வருகின்றது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கோவை நகரின் பல்வேறு இடங்களில் "வானத்தில் பல ஸ்டார்கள் ஜொலிக்கலாம், பூமியில் ஒரே ஸ்டார் நம்ம சூப்பர் ஸ்டார்" என்ற வாசகங்களுடன் ரஜினி ரசிகர்கள் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.



கோவை ரயில் நிலையம், டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, காந்திபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் இந்த சுவரொட்டகள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழ் திரையுலகில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பேச்சு அத்துறையினர் மத்தியில் நிலவி வருகிறது.

அடுத்த சூப்பர் ஸ்டார் குறித்து மாறுபட்ட கருத்துகளை திரையுலகில் இருப்பவர்களும், விமர்சகர்களும் தெரிவித்து வரும் நிலையில் கோவை மாவட்ட ரஜினி ரசிகர்கள் இந்த போஸ்ட்டரை ஒட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...