பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது

தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு கோவையில் மட்டும் 12.65 லட்சம் பள்ளி மாணவர்கள், குழந்தைகள், பெண்களுக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்க இலக்கு நிர்ணியிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



கோவை: அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் விடுபட்ட குழந்தைகளுக்கு வரும் 24ஆம் தேதி மாத்திரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இன்றைய தினம் குடற்புழு நீக்க சிறப்பு முகாம் அனைத்து இடங்களிலும் நடைபெறுகிறது. விடுபட்ட குழந்தைகளுக்கு, வரும், 24 ம் தேதி மருந்து வழங்கப்படும். 1 வயது முதல், 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 20 – 30 வரையிலான பெண்களுக்கு, குடல்புழு நீக்க மருந்து(அல்பெண்டசோல்) வழங்கப்படுகிறது.



கோவை மாவட்ட சுகாதார துறை சார்பில், கோவை, மாவட்டத்தில் உள்ள அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவுக்குப் பின் குடற்புழு நீக்க மருந்து மாத்திரை வழங்கப்படுகிறது.

கோவை மாவட்ட சுகாதார பணி அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள, 985 தனியார், 1,070 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், 1,697 அங்கன்வாடி மையங்கள், 150 கல்லுாரிகள், 89 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 328 துணை சுகாதார நிலையங்கள் மூலம் மாத்திரை முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது.

இதில் விடுபட்ட குழந்தைகளுக்கு வரும், 24 ம் தேதி வழங்கப்படும். மாவட்டத்தில், 12.65 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு மாத்திரை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...