நூல் விலை கிலோவுக்கு ரூ.10 உயர்வு - நூற்பாலைகள் அறிவிப்பு!

நூல் விலையை 15 நாளைக்கு ஒருமுறை வெளியிடப்படும் என நூற்பாலைகள் அறிவித்திருந்த நிலையில், நூல் விலை உயர்வு பட்டியலை நூற்பாலைகள் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்து வகை நூல்களும் கிலோவுக்கு ரூ.10 உயர்த்தி நூற்பாலைகள் அறிவித்துள்ளன.



திருப்பூர்: நூல் விலை கிலோவுக்கு ரூ.10 உயர்த்தி நூற்பாலைகள் இன்று அறிவித்துள்ளன.

திருப்பூரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல் ஆகும்.



தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பார்கள். நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும். கடந்த ஆண்டில் அடிக்கடி நூல் விலை உயர்ந்து வந்தது. எனவே நூல் விலையை குறைக்க தொழில் துறையினர் வலியுறுத்தி வந்தனர்.



இந்த நிலையில் நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் 20 ரூபாய் நூல் விலை குறைந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் நூல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஜனவரி மாத நிலையை தொடரும் என நூற்பாலைகள் அறிவித்திருந்தது.

இதன் தொடர்ச்சியாக மார்ச் மாதத்திற்கான நூல் விலைகளும் எந்த விதமான மாற்றமும் ஏற்படவில்லை. இதேபோல் ஏப்ரல், மே, ஜூன் மாதத்திலும் நூல் விலையில் பெரிய மாற்றம் இல்லாமல் நீடித்தது.

ஜூலை மாதத்திற்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.20 முதல் 25 குறைந்தது. இதற்கிடையே நடப்பு மாதத்திற்கான (ஆகஸ்டு) நூல் விலையை நூற்பாலைகள் கடந்த 1ம் தேதி அறிவித்தன. இதில் கடந்த மாத விலையே தொடரும் எந்த மாற்றமும் இல்லை என நூற்பாலைகள் அறிவித்தன.

இந்நிலையில், நூலின் விலையை மாதத்திற்கு இரண்டு முறை, அதாவது 15 நாட்களுக்கு ஒரு முறை வெளியிடுவதாக நூற்பாலைகள் அறிவித்தன. அதன்படி இன்று நூற்பாலைகள் நூல் விலை பட்டியலை வெளியிட்டனர்.

அதில், அனைத்து வகை நூல்களும் கிலோவுக்கு ரூ.10 உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி ஒரு கிலோ 10வது நம்பர் கோம்டு நூல் ரூ.175க்கும், 16ஆம் நம்பர் ரூ.185-க்கும், 20ஆவது நம்பர் கோம்டு நூல் ரூ.243-க்கும், 24-ம் நம்பர் ரூ.255-க்கும், 30-ம் நம்பர் ரூ.265-க்கும், 34-ம் நம்பர் ரூ.280-க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 40-ம் நம்பர் ரூ.300-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.235-க்கும், 24-ம் நம்பர் ரூ. 245-க்கும், 30-ம் நம்பர் ரூ.255-க்கும், 34-ம் நம்பர் ரூ. 270-க்கும், 40-ம் நம்பர் ரூ.290-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...