வால்பாறையில் உள்ள அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்!

வால்பாறையில் உள்ள நகராட்சி, நீதிமன்ற, வனத்துறை, வட்டாட்சியர், காவல்நிலையம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, முக்கிய அதிகாரிகள் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.



கோவை: வால்பாறையில் உள்ள அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பகுதியில் நாட்டின் 77 வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.



இதனை முன்னிட்டு, இன்று காலை வால்பாறை நகராட்சி முன்பு அமைக்கப்பட்டிருந்த கொடி மரத்தில் தேசிய கொடியை நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.



விழாவிற்கு முன்னிலை வகித்த நகராட்சி துணைத்தலைவர் அக்காமலை செந்தில் அங்கு கூடியிருந்த அனைவருமக்கும் இனிப்புகள் வழங்கினார். இதில் நகர மன்ற உறுப்பினர்கள் ஜெ.பாஸ்கர், மற்றும் அலுவலக ஊழியர்களும் சுகாதாரத்துறை ஊழியர்களும் பங்கேற்றனர். பின்னர் அனைவரும் ஊர்வலமாக சென்று நகர மைய பகுதியில் உள்ள காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினர்.

வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த விழாவில், வட்டாட்சியர் அருள் முருகன் கலந்துகொண்டு தேசிய கொடியேற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.

வால்பாறை காவல் நிலையத்தில் மிக சிறப்பாக ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த கொடி கம்பத்தில் இளம் ஆய்வாளர் முருகானந்தம் தேசிய கொடியேற்றி வைத்து அனைவருமக்கும் இனிப்புகள் வழங்கினார்.

கூட்டுறவு காலனியிலுள்ள வால்பாறை வனத்துறை அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடி மரத்தில் ரேஞ்சர் மணிகண்டன் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். வால்பாறை நீதிமன்ற அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடிமரத்தில் நீதித்துறை நடுவர். செந்தில் குமார் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

நகரிலுள்ள அரசு கலை கல்லூரியில் முதல்வர் சிவசுப்ரமணியம் தேசிய ஏற்றி மரியாதை செலுத்தினார்.



இதில் கல்லூரி மாணவ மாணவிகள் 77 வது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த வடிவத்தை கண்டு அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதே போல வால்பாறை சுற்றியுள்ள தேயிலை தோட்டங்களிலும் திட்ட தொழிலாளர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...