சுதந்திர தின விழா கொண்டாட்டம் - வ.உ.சி மைதானத்தில் தேசிய கொடியை ஏற்றினார் மாவட்ட ஆட்சியர்

கோவையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் மூவர்ண கொடியை ஏற்றி, காவல்துறை அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் நாட்டின் 76ஆவது சுதந்திர தின விழா கோலாகலமா கொண்டாடப்பட்டது.



கோவை: வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பல்வேறுதுறைகளில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பதக்கங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.



சுதந்திர தினத்தை ஒட்டி கோவை வ.உ.சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.



இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் தேசியக் கொடி ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.



அதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில் சார்பில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கங்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.



அதன்படி, கோவை மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் - 36 பேர், கோவை மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் - 73 பேர் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் - 153 பேர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



பின்னர் காந்திமாநகர் அரசு மேல்நிலைப்பள்ளி‌, அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளி, சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட பள்ளி மற்றும் கல்லூரியைச் சேர்ந்த 350 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்டத்தைச் சேர்ந்த தேசப்பற்றாளர்கள் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு சுதந்திர தின விழாவினை சிறப்பித்தனர்.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...

சென்னை-கோவை விமானக் கட்டணம் ரூ.16,500 ஆக உயர்வு: தொடர் விடுமுறை காரணம்

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.4,966-இலிருந்து ரூ.16,496 ஆக பல...

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளி ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் ஊர்வலம் நடைபெற்றது. இயேசு சிலுவையைச் சுமந்து செல்லும்...

ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நெசவாளர்கள் கூட்டமைப்பு - இலவச மின்சாரம் வேண்டும்

ஈரோட்டில் தமிழக நெசவாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து மனு அளித்தனர். கைத்தறி மற்றும் விசைத்தறி...

நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து இலவச மின்சாரம் வழங்க மனு

Erode மாவட்டத்தில் முதல்வர் Stalin ஐ சந்தித்த தமிழ்நாடு நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள், தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்ற இ...