இளைஞர் காங்கிரஸ் சார்பில் ‘சக்தி சூப்பர் பெண்’ என்ற புதிய திட்டத்தின் பதாகை வெளியீடு!

கோவை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 'சக்தி சூப்பர் பெண்' (SHAKTHI SUPER SHE) என்ற திட்டத்தின் பதாகையை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீநிதி பிரேம் வெளியிட்டார்.



கோவை: 'சக்தி சூப்பர் பெண்' என்ற திட்டத்தின் பதாகையை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீநிதி பிரேம் வெளியிட்டார்.

இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள "சக்தி சூப்பர் பெண்" (SHAKTHI SUPER SHE) என்ற திட்டத்தின் பதாகை கோவை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.



இந்த நிகழ்வில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீநிதி பிரேம் பதாகை வெளியிட்டார்.



மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் காயத்ரி ராஜ முரளி சாந்தாமணி பச்சைமுத்து முன்னிலையில் வைத்தனர்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீநிதி பிரேம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,



காங்கிரஸ் கட்சியில் பெண்களின் ஆளுமை திறனை வெளிப்படுத்தும் விதமாகவும், அவர்களின் தலைமை பண்பை மேம்படுத்தும் விதமாகவும், சூப்பர் சக்தி சூப்பர் பெண் என்ற இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் உள்ள மகளிர் மட்டுமின்றி கட்சியில் இல்லாத பெண்களும் இணையலாம்.

இந்நிகழ்ச்சியில் தேசிய இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...