தலையில் கல்லைப்போட்டு பெயிண்டர் கொலை - குடிக்க பணம் தராததால் ஆத்திரம்…!

கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வீரபாண்டி பிரிவு பகுதியில் தலையில் கல்லைப் போட்டு மாரிதுரை என்ற பெயிண்டர் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிக்க பணம் கொடுக்காத ஆத்திரத்தில் பெயிண்டரை சக்திவேல் என்ற இளைஞர் கொலை செய்தார்.


கோவை: குடிக்க பணம் தர மறுத்த பெயிண்டரின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த சக்திவேல் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மாரிதுரை மற்றும் சக்திவேல். கோவையில் வசித்து வரும் 50 வயதான மாரிதுரையும் 19 வயதான சக்திவேலும் ஒரே ஊர் என்பதால் இருவருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இருவருக்குமே குடிப்பழக்கமும் இருந்துள்ளது. இதில் பெயிண்ட்டராக உள்ள மாரிதுரை சாலை ஓரம் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று வீரபாண்டி பிரிவு பகுதியில் குடிபோதையில் வந்த சக்திவேல் ஏற்கனவே போதையில் இருந்த மாரிதுரையிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார். மாரிதுரை தர மறுக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சக்திவேல் அருகில் கிடந்த கல்லை எடுத்து மாரிதுரையின் தலை மற்றும் முகத்தில் தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த மாரிதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் மாரிதுரையை கொலை செய்த சக்திவேலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...