பெண் கவுன்சிலர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு விழுந்த விவகாரம் – 5 பேரை பிடித்து சிறையில் தள்ளிய போலீசார்

கோவையில் இரவில் தூங்கிக்கொண்டிருந்த பெண் கவுன்சிலர் சித்ரா மற்றும் அவரது குடும்பத்தினரை ஒரு மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிவெட்டு தப்பிச்சென்றது. இடத்தகராறு பிரச்சனையில் கவுன்சிலரை தீர்த்துக்கட்ட துணிந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: இடத்தகராறு பிரச்சனையில் மர்ம கும்பல் வெட்டிய அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த பெண் கவுன்சிலர் அவரது, கணவர் மற்றும் மகன் ஆகிய மூன்று பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை மலுமிச்சம்பட்டி ஊராட்சி மன்ற பெண் கவுன்சிலர் மற்றும் குடும்பத்தினரை அரிவாளால் வெட்டிய 5 பேர் கொண்ட கும்பலை செட்டிபளையம் போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி அவ்வை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா. திமுகவைச் சேர்ந்த இவர், மலுமிச்சம்பட்டி ஊராட்சியில் 3 வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார்.

நேற்று முன் தினம் இரவு சித்ரா மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்தபோது, திடீரென முகமூடி அணிந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல், சித்ரா மற்றும் அவரது கணவர் ரவிக்குமார், மகன் மோகன் ஆகியோரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

மூவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோவை அரசு மருத்துவமனையில் மூவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை செய்த போது, சித்ராவிற்கும் வேறு ஒருவர் நபருக்கும் இருந்த இடத்தகராறு காரணமாக ராஜன் மூலம் அடியாட்களுடன் வந்து சித்ரா மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.

இதனையடுத்து தலைமறைவாக இருந்த ராஜன் (23), முத்துப்பாண்டி (24), முகேஷ்கண்ணன் (22), பிச்சை பாண்டி (23), ஶ்ரீரக்சித் (18) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...