உடுமலையில் உலக சாதனைக்காக பவளக்கொடி வள்ளி கும்மியாட்டம் கோலாகலம்..! - 2000 கலைஞர்கள் பங்கேற்று அசத்தல்

உடுமலை அருகே உலக சாதனைக்காக நடைபெற்ற பவளக்கொடி வள்ளி கும்மியாட்டத்தில் இராண்டாயிரம் கலைஞர்கள் கலந்துகொண்டு உருமி இசைக்கு ஏற்றவாறு ஆடினர்.



திருப்பூர்: அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒன்றாக பவளக்கொடி வள்ளி கும்மியாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த அசத்தல் ஆட்டத்தை ஏராளமானோர் ஒன்றுகூடி ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மலையாண்டி கவுண்டனூர் பகுதியில் சக்தி கலைக்குழுவின் பொன்விழா அரங்கேற்றத்தை முன்னிட்டு உலக சாதனை நிகழ்வாக சுமார் 2000 கலைஞர்கள் பங்குபெறும் பவள கொடி கும்மியாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.



அழிந்து வரும் பழமையான கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சக்தி கலை குழு ஆசிரியர் மகாலிங்கம் தலைமையில் பள்ளியொன்றில் நடைபெற்ற பள்ளி கும்மி ஆட்டத்தில் நாட்டுப்புற பாடல்கள், பாரதிதாசன், பாரதியார் பாடல்கள், திரைப்பட தத்துவ பாடல்கள் உட்பட கருத்துமிக்க பாடல்கள் இடம்பெற்றன.



குறிப்பாக ஆண்கள், பெண்கள் அனைவரும் காலில் சலங்கை கட்டி பவளக்கொடி வள்ளி கும்மி ஆட்டம் ஆடி அசத்தினர்.



உருமி இசைக்கு ஏற்றவாறு ஆடிய வள்ளி கும்மி ஆட்டத்தை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், ஈஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன், உடுமலை நகராட்சி முன்னாள் தலைவர் சி வேலுச்சாமி, சக்தி கலைகுழு ஆசிரியர் மகாலிங்கம், கண்ணமநாயக்கனூர் ஊராட்சி தலைவர் கருப்பாயி, ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி மன்ற தலைவர் மோகன வள்ளி ராஜசேகரன், ரயில்பயணிகள் ஆலசோணை குழு உறுப்பினர் உடுமலை சத்யம் பாபு, உடுமலை ஓன்றிய துணை செயலாளர் உரல்பட்டி சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பாப்பநாயக்கன்பாளையம் துணை மின்நிலையப் பராமரிப்பு: ஆகஸ்ட் 18-ல் 7 மணி நேர மின் தடை

பாப்பநாயக்கன்பாளையம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆகஸ்ட் 18-ல் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்...

குப்பேபாளையத்தில் நாளை (18.08.2026) மின்தடை அறிவிப்பு

குப்பேபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 18-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை குப்பேபா...

பாதசாரி மீது பைக் மோதல்: தலையில் பலத்த காயம், இளைஞர் மீது வழக்கு

கோவை தெலுங்குபாளையம் சாலையில் நடந்து சென்ற 55 வயது நாகராஜ் மீது கட்டுப்பாட்டை இழந்த பைக் மோதியதில் தலையில் பலத்த காயம்....

சரவணம்பட்டியில் லாரி டிரைவர் மர்ம மரணம் - போலீசார் தீவிர விசாரணை

கோவை சரவணம்பட்டி விநாயகாபுரம் இளங்கோ பள்ளி அருகே நிறுத்தப்பட்டிருந்த மினி லாரியில் டிரைவர் ராஜு (53) மர்மமான முறையில் உய...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...