நடிகர் சத்யராஜின் தாயார் உடலுக்கு அமைச்சர் சேகர்பாபு, எம்.பி ஆ.ராசா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்

நடிகர் சத்யராஜின் தாய் நாதாம்பாள் நேற்று மாலை உயிரிழந்த நிலையில் கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள சத்யராஜின் இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடலுக்கு அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.



கோவை: நடிகர் சத்யராஜ் தாயார் உடலுக்கு அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் நேற்று மாலை உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள சத்யராஜின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

நாளை காலை உடல் ஆவாரம்பாளையம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ள சூழலில் இன்று காலை அவரது உடலுக்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.



அதைத்தொடர்ந்து நீலகிரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா மற்றும் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா திமுக தலைமை சார்பிலும் முதலமைச்சர் சார்பிலும் சத்யராஜ் தாயாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்ததாக தெரிவித்தார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...