நடிகர் சத்யராஜின் தாயார் மரணம் - திரையுலகினர் இரங்கல்!

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வசித்து வந்த நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் (94) வயது மூப்பு காரணமாக இன்று மாலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வசித்து வந்த நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் வயது மூப்பு காரணமாக இன்று மாலை உயிரிழந்தார்.



நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 94. இவர் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வசித்து வந்த நிலையில் வயது மூப்பின் காரணமாக இன்று மாலை காலமானார்.

நாதாம்பாளுக்கு சத்யராஜ் என்ற மகனும், கல்பனா மற்றும் ரூபா சேனாதிபதி ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இச்செய்தியை அறிந்த ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்து விமானம் மூலம் நடிகர் சத்தியராஜ் கோவைக்கு வந்தார்.



இதனையடுத்து, ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார். அவருடன் அவரது மகனும் நடிகருமான சிபிராஜ் வந்துள்ளார். இந்நிலையில், சத்யராஜின் தாயார் மறைவுக்கு பல்வேறு திரை மற்றும் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...