கோவையில் விதிமீறலில் ஈடுபட்ட 4 கல்குவாரிகளுக்கு ரூ.44 கோடி அபராதம் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

கோவை மாவட்டத்தில் உள்ள குவாரிகளில் விதிமீறல் புகாரை தொடர்ந்து, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக கூறிய மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் விதிமீறலில் ஈடுபட்ட 4 கல்குவாரிகளுக்கு ரூ.44 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் விதிமீறலில் ஈடுபட்ட 4 கல்குவாரிகளுக்கு 44 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோவையில் கிணத்துக்கடவு, மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இதில் பல்வேறு கல்குவாரிகள் அனுமதி இன்றி செயல்படுவதாகவும் கனிம வளங்களை வெளி மாநிலங்களுக்கு கடத்துவதாகவும் கூறி பல்வேறு அரசியல் கட்சியினர், விவசாயிகள் தொடர் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் விதிமீறல்களில் ஈடுபட்டதாக, நான்கு கல் குவாரிகளுக்கு, கோவை மாவட்ட நிர்வாகம், 44 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் கூறியதாவது,

கோவை மாவட்டத்தில் உள்ள 140 குவாரிகள் வருவாய்த்துறை மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் உள்ளது. விதிமீறல் செய்பவர்களுக்கு அதிகாரிகள் அதிக அபராதம் விதித்து வருகின்றனர்.

பொள்ளாச்சியில் உள்ள ஏழு குவாரிகளில் விதிமீறல்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். வருவாய்த்துறை மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் அறிக்கையின் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அதன்படி, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் விதிமீறலில் ஈடுபட்ட 4 கல் குவாரிகளுக்கு 44 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...