கோவை நிர்மலா கல்லூரியில் தேசிய பெண்கள் தினவிழா - மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பங்கேற்பு!

கோவை நிர்மலா கல்லூரியில் தேசிய பெண்கள் தினவிழாவில் கலந்து கொண்ட மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை போலீஸ் அக்கா செயலி மூலம் தீர்க்க பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.



கோவை: போலீஸ் அக்கா செயலி மூலம் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க ஒரு வருடமாக மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக மாநகர காவல் ஆணையர் பாலக்கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை நிர்மலா கல்லூரியில் நடைபெற்ற தேசிய பெண்கள் தினவிழா நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.



இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் உமாமகேஸ்வரி, பாத்திமா சிரியா புஷ்பம் ஆகியோருக்கு சிறப்பு செய்யபட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்,



போலீஸ் அக்கா செயலி மூலமாக கல்லூரி முழுவதும் கண்காணித்து வருகிறோம். மாணவிகள் மத்தியில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் வெளியில் சொல்ல முடியாத சூழல் உருவாவதோடு மன அழுத்தம் ஏற்படும்.

காவல் நிலையம் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகும். அதற்காக போலீஸ் அக்கா மூலமாக கருத்து தெரித்து அப்பிரச்சனையை சுமூகமாக முடித்து கொள்ளலாம்.



ஒரு இளைஞன் மாணவியை புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டினால் மாணவி, தனக்கு போலீஸ் அக்கா-வைத் தெரியும் என கூறுவதோடு போலிஸ் அக்கா செயலி மூலமாக பிரச்சனையை எவ்வாறு தீர்க்க முடியும் என்பதற்காக செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோல் காவல்துறையில் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அதிவிரைவுப்படை, மோப்பநாய் பிரிவு, கனரக வாகன ஓட்டுநர்கள் என அனைத்து துறைகளில் பணிபுரிகின்றனர். மேலும் பெண்கள் கண்டிப்பாக கல்வி பயில வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்,



கல்லூரி மாணவிகளுக்கு கடந்த ஒரு வருடமாக போலீஸ் அக்கா செயலி மூலம் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தி வருகிறோம். கோவை மாநகரில் அல்லது கிராமப்புறங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்களை அவர்களை பாதுகாப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

மேலும் இடைநிற்றலை தடுப்பதற்காக மாணவ மாணவிகளை பள்ளிகளில் சேர்த்து வருகிறோம். கடந்த வருடம் சுமார் 150 மாணவ மாணவிகளை பள்ளிகளில் சேர்த்துள்ளோம். இந்த வருடம் 62 மாணவ மாணவிகளை சேர்த்துள்ளோம்.

பள்ளிகளில் படிப்பதற்கு ஏதேனும் தேவை மற்றும் பிரச்சனை என்றால் அவற்றை போலீஸ் அக்கா மூலம் சரி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

நேற்று நீதிமன்றத்தில் நடந்த சம்பவத்தில் வாரண்டுகாக மனைவியுடன் ஒருவர் நீதிமன்றத்திற்கு வருகிறார். காவல்துறையினர் அவரை நீதிபதியிடம் ஆஜர்படுத்துவதற்காக அழைக்கும் போது தன்னை கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் மனைவியின் பையில் இருந்த கத்தியை எடுத்து கையில் காயம் ஏற்படுத்த முயற்சி செய்துள்ளார்.

அடுத்த சில நிமிடங்களிலேயே காவலர்கள் பிடித்து நீதிபதி முன் ஒப்படைத்தார்கள். பிடியாணையை திரும்ப வாங்குவதற்காக வந்தவர் கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் ஓடியுள்ளார். தொடர்ந்து நீதிமன்றத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் பெண்கள் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. தவிர தமிழக அரசு உத்தரவின் படி காவலர்கள் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். ஏற்கனவே இருப்பது போல பெண்களுக்கும் மாணவர்களுக்கும் பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...