வால்பாறையில் உலக பழங்குடியினர் தின விழா - உற்சாகமாக கொண்டாட்டம்!

வால்பாறையில் பழங்குடியின மக்கள் சார்பில் நடைபெற்ற உலக பழங்குடியினர் தின விழா பாரம்பரிய இசையுடன், ஆடல், பாடல் என உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினர்களாக வனச்சரகர்கள் மணிகண்டன், வெங்கடேஷ் மற்றும் நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.



கோவை: வால்பாறையில் உலக பழங்குடியினர் தினம் முன்னிட்டு பழங்குடியின மக்கள் பாரம்பரிய இசையுடன், ஆடல், பாடல் என உற்சாகமாக கொண்டாடினர்.

வால்பாறை சுற்றுவட்டார வனப்பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர் இங்கு சுமார் 1000க்கும் மேல் மக்கள் உள்ளனர்

கோவை மாவட்டம் வால்பாறையில் உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு வால்பாறையில் பழங்குடியினர் மக்கள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. வால்பாறை நகராட்சியில் உள்ள பழங்குடியின மக்கள் ஒன்று சேர்ந்து இந்த விழாவை நடத்தினர்.

இந்த விழாவில் வனச்சரகர் மணிகண்டன் மற்றும் வெங்கடேஷ் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.



மேலும் வால்பாறை நகராட்சி நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி கலந்து கொண்டார்.



முன்னதாக குத்து விளக்கு ஏற்றி வைத்து விழாவை துவங்கி வைத்தனர்.



இதனையடுத்து, பழங்குடியின மக்கள் தங்களின் பாரம்பரிய இசை எழுப்பி நடனமாடி, பாட்டுப்பாடி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.



இந்நிலையில், வால்பாறை பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வனப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்களுக்கு தேவையான மின்சார வசதி சாலை வசதி மற்றும் அரசாங்கம் வழங்கும் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்று பழங்குடி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....