மீன் வாங்கினால் தக்காளி இலவசம் - வாடிக்கையாளர்களை கவரும் மீன் கடை!

கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன் கடை நடத்தி வரும் ஜாபர் என்பவர் தனது கடைக்கு மீன் வாங்குவோர்க்கு கால் கிலோ தக்காளியை இலவசமாக வழங்கி வருகிறார். இந்த சலுகை வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், இது இன்றும் நாளையும் மட்டுமே கிடைக்கும் என அறிவித்துள்ளார்.


கோவை: உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்கினால் தக்காளி இலவசமாக கிடைக்கும் என்று ஜாபர் என்பவர் அறிவித்துள்ளது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அதுகுறித்து மீம்ஸ் மற்றும் காமெடி பதிவுகளை வலைதள வாசிகள் பகிர்ந்து வருகின்றனர். கோவையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கூட மணமக்களுக்கு தக்காளி அன்பளிப்பாக அளிக்கப்பட்டது.

பருவநிலை மாற்றம் மற்றும் வரத்து குறைவு காரணமாக தக்காளியின் விலை அதிகரித்து வருவதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தக்காளியை அரசாங்கமே நேரடியாக கொள்முதல் செய்து நியாயவிலை கடைகளில் மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.



இந்நிலையில் கோவையில் மீன் கடை நடத்தி வருபவர் அவரது கடையில் மீன் வாங்குவோர்க்கு இலவசமாக கால் கிலோ தக்காளியை வழங்கி வருகிறார். வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இன்றும், நாளையும் மீன் வாங்குபவர்களுக்கு தக்காளியை இலவசமாக கொடுப்பதாகவும் ஜாபர் தெரிவித்துள்ளார்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...