போத்தனூரில் சிறப்பு குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

கோவை போத்தனூர் பகுதியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் குடும்பம் (families for children) என்ற சிறப்பு குழந்தைகள் காப்பகம், மற்றும் செயிண்ட் ஜோசப்ஸ் ஹோம் என்ற முதியோர் இல்லம் ஆகியவற்றில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமாரர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: போத்தனூர் அருகே செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகம் மற்றும் முதியோர் இல்லத்தில் மாவட்ட கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை போத்தனூரில் செயல்பட்டு வரும், குழந்தைகள் குடும்பம் (families for children) சிறப்பு குழந்தைகள் காப்பகம், மற்றும் செயிண்ட் ஜோசப்ஸ் ஹோம் முதியோர் இல்லம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது உதவி ஆட்சியர் ஆசிக் அலி, மாவட்ட சமூகநல அலுவலர் அம்பிகா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மதியழகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பு குழந்தைகள் காப்பகத்தில் 24 பெண் குழந்தைகள் மற்றும் 19 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த காப்பகத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் உணவு, அடிப்படை வசதிகள், கல்வி கற்பிக்கும் விதம் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்து, அங்கிருந்த குழந்தைகளிடம் கலந்துரையாடினார்.



அதனை தொடர்ந்து போத்தனூர் பகுதியில் உள்ள செயிண்ட் ஜோசப்ஸ் ஹோம் முதியோர் இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டு அவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்து அங்கிருந்த முதியோர்களிடம் கேட்டறிந்தார்.

Newsletter

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...