போத்தனூரில் சிறப்பு குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

கோவை போத்தனூர் பகுதியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் குடும்பம் (families for children) என்ற சிறப்பு குழந்தைகள் காப்பகம், மற்றும் செயிண்ட் ஜோசப்ஸ் ஹோம் என்ற முதியோர் இல்லம் ஆகியவற்றில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமாரர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: போத்தனூர் அருகே செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகம் மற்றும் முதியோர் இல்லத்தில் மாவட்ட கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை போத்தனூரில் செயல்பட்டு வரும், குழந்தைகள் குடும்பம் (families for children) சிறப்பு குழந்தைகள் காப்பகம், மற்றும் செயிண்ட் ஜோசப்ஸ் ஹோம் முதியோர் இல்லம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது உதவி ஆட்சியர் ஆசிக் அலி, மாவட்ட சமூகநல அலுவலர் அம்பிகா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மதியழகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பு குழந்தைகள் காப்பகத்தில் 24 பெண் குழந்தைகள் மற்றும் 19 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த காப்பகத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் உணவு, அடிப்படை வசதிகள், கல்வி கற்பிக்கும் விதம் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்து, அங்கிருந்த குழந்தைகளிடம் கலந்துரையாடினார்.



அதனை தொடர்ந்து போத்தனூர் பகுதியில் உள்ள செயிண்ட் ஜோசப்ஸ் ஹோம் முதியோர் இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டு அவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்து அங்கிருந்த முதியோர்களிடம் கேட்டறிந்தார்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...