சீத்தாப்பழத்தில் 20க்கும் மேற்பட்ட தேசத் தலைவர்கள் படங்களை வரைந்து அசத்திய கோவையை சேர்ந்த நகை வடிவமைப்பாளர்!

கோவை குனியமுத்தூரை சேர்ந்த தங்க நகை வடிவமைப்பாளரான யூ.எம்.டி.ராஜா என்பவர், சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சீத்தாப்பழத்தில், மகாத்மா காந்தி, கட்டபொம்மன், காமராஜர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தலைவர்களின் படங்களை வரைந்து அசத்தியுள்ளார்.


கோவை: கோவையை சேர்ந்த நகை வடிமைப்பாளர் ஒருவர், ஒரு சீத்தாப்பழத்தில் 20க்கும் மேற்பட்ட தேசத் தலைவர்கள் படங்களை வரைந்து அசத்தியுள்ளார்.



கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் யூ.எம்.டி.ராஜா, தங்க நகை வடிவமைப்பாளராக பணி செய்து வரும் இவர் அரிசி, மாங்கனி, முட்டை ஓடு, சோப்பு, மெழுகு உள்ளிட்டவையில் வித்தியாசமான முறையில் படங்களை வரைவதில் வழக்கமாக கொண்டுள்ளார்.



இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் தேச தலைவர்களை போற்றும் விதமாக கனிந்தவர்கள், முதிர்ந்தவர்கள், இனிமையானவர்கள் என்பதை உணர்த்தி சீத்தாப்பழத்தில் அவர்களது படத்தை துல்லியமாக வரைந்து அசத்தியுள்ளார்.



சீதாப்பழத்தில் உள்ள கணுவில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், ராஜேந்திர பிரசாத், பாரதியார்,நேரு, வேலு நாச்சியார், அம்பேத்கர், அப்துல் கலாம், வீரபாண்டிய கட்டபொம்மன், காமராஜர் உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட தேசத் தலைவர்களின் படங்களை பல வண்ணங்களில் வரைந்துள்ளார்.



சுமார் 12 மணி நேரத்தில் தேச தலைவர்களின் படங்களை வரைந்த யூ.எம்.டி.ராஜாவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...