திருப்பூரில் சாயக்கழிவு நீரால் மாசடையும் குளத்தை பாதுகாக்க கோரி இயற்கை ஆர்வலர்கள் மனு!

திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில் 26 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மூளி குளம் சாய மற்றும் சாக்கடை கழிவு நீரால் மாசடைந்து வருவதை தடுக்க வலியுறுத்தி, வேர்கள் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருப்பூரில் சாய மற்றும் சாக்கடை கழிவு நீரால் மாசடைந்து வரும் குளத்தினை பாதுகாக்க இயற்கை ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில் 26 ஏக்கர் பரப்பளவில் மூளி குளம் அமைந்துள்ளது. இந்த குளமானது சாய, சாக்கடை கழிவு நீர் மற்றும் ஆகாயத் தாமரைகள் படர்ந்து யாருக்கும் பயன்படாத நிலையில் இருந்தது.

இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு திருப்பூர் மாவட்ட நிர்வாகம், தனியார் அமைப்புடன் இணைந்து குளத்தை சுத்தப்படுத்தியதை தொடர்ந்து குளத்தை யாரும் மாசுப்டுத்தாமல் இருக்க குளத்தை சுற்றிலுமுள்ள கரை பலப்படுத்தப்பட்டு கம்பி வேலியும் அமைக்கப்பட்டது. இதன் காரணமாக குளம் மாசடையாமல் இருந்தது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக குளத்தில் மீண்டும் சாய மற்றும் சாக்கடை கழிவுநீர் கலக்க ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக குளம் மீண்டும் மாசடைய தொடங்கியுள்ளது.

குளக்கரையின் அருகிலேயே செயல்படும் சாய ஆலை நிறுவனங்கள் மற்றும் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் சாய ஆலை கழிவு நீராலும், மாநகராட்சி பகுதிகளிலிருந்து வெளியேறும் சாக்கடை கழிவு நீராலும் குளமானது மீண்டும் மாசடைய துவங்கியுள்ளது.



இதனை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என வேர்கள் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...