உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

உடுமலை சந்தையில் கடந்த வாரங்களில் 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.1800 வரை விற்பனையான நிலையில், தற்போது வரத்து அதிகரிப்பின் காரணமாக தரத்தை பொறுத்து தக்காளி பெட்டி ரூ.500 முதல் 900 வரை மட்டும் விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



திருப்பூர்: தக்காளி வரத்து அதிகரிப்பின் காரணமாக உடுமலை சந்தையில் தக்காளி விலை பாதியாக குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சந்தையில் 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.1800 வரை விற்பனையான நிலையில் தற்போது வரத்து அதிகரிப்பால் விலை பாதியாக குறைந்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, உடுமலை சுற்றுவட்டார பகுதியில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வந்தாலும் பெரும்பாலான நேரங்களில் உரிய விலை கிடைக்காமல் இழப்பை சந்திக்கும் நிலையே இருந்து வந்தது.



இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் 14 கிலோ எடை கொண்ட வெட்டி தக்காளி 1800 ரூபாய் வரை விலை போனது அதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் தற்பொழுது உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து அதிகமாக இருப்பதால் தரத்தை பொறுத்து தக்காளி பெட்டி ரூ.500 முதல் 900 வரை மட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் குடும்ப பட்ஜெட்டில் தக்காளி உள்ளிட்ட காய்கறி காய்கறிகளுக்கு பெரும் தொகை ஒதுக்க வேண்டிய நிலை உள்ளதாக வேதனைப்பட்டு வந்த இல்லத்தரசிகள் தக்காளி விலை குறைவால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

நினைத்ததை சாதிக்கும் செயல்வீரர் செந்திலபாலாஜி - கோவையில் முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

கோவையில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், மின்துறை அம...

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...