தாராபுரம் அருகே அனுமதியின்றி செம்மண் கடத்திய 9 லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்!

தாராபுரம் அடுத்த பழனிரோடு அருகே அனுமதியின்றி 5 கோடி மதிப்பிலான செம்மண் ஏற்றிச் சென்ற 9 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்த நிலையில் லாரிகளை கைப்பற்றிய வருவாய் துறையினர், அதனை கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே செம்மண் கடத்திச் சென்ற கேரளாவை சேர்ந்த 9 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் கேரளாவை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் உரிய அனுமதியின்றி சேம்பர்களுக்கு பர்மிட் இல்லாமலும், அதிக பாரத்துடன் செம்மண் லாரிகள் இயக்கப்படுவதாக பொதுமக்களிடம் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனிடையே, கடந்த 2 தினங்களுக்கு முன்பு வட்டார போக்குவரத்து அலுவலர் கேரளா மாநில லாரிகளை பிடித்து பறிமுதல் செய்துள்ளார்.



இந்நிலையில் தாராபுரம் பழனிரோடு நளினி காலேஜ் ரவுண்டானா அருகே உரிய அனுமதியின்றி செம்மண் ஏற்றி வந்த 9‌ கேரளா மாநில லாரிகளை பொதுமக்கள் தடுத்து சிறைபிடித்தனர்.



பின்னர் இதுகுறித்து தாராபுரம் வட்டாட்சியருக்கும் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. தாராபுரம் வட்டாட்சியர் ஜெகஜோதி தாராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினர்.



விதிமுறைக்கு புறம்பாக செம்மண் லோடு ஏற்றிவந்த 9 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டு கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தாராபுரம் நகர வருவாய் ஆய்வாளர் சரவணன் போலீசில் புகார் அளித்தார் புகாரின் பெயரில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான ஒன்பது லாரிகள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...