தாராபுரம் அமராவதி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்!

தாராபுரம் அமராவதி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, அமராவதி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழாவில் பெண்கள் மற்றும் ஆண்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து அரசமரம் சின்னக்கடை முதல் அமராவதி ஆறு வரை ஊர்வலமாக சென்றனர்.



திருப்பூர்: தாராபுரம் அமராவதி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, அமராவதி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

பாரம்பரிய விழாக்களில் ஒன்றாக ஆடிப்பெருக்கு விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18-ம் தேதி பெண்களால் மிக சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். விவசாயத்திற்கு உறுதுணையாக பொங்கி வரும் அமராவதியை வரவேற்கும் விழாவாகும்.

இதனையொட்டி, தாராபுரம் அமராவதி ஆற்றின் கரைகள் மற்றும் நீர் நிலைகளில் பெண்கள் காப்பரசி, ஆப்பிள், விலாம்பழம், சாத்துக்குடி போன்ற பழங்கள், காதோலை கருகமணி போன்ற பொருள்களை வைத்து அமராவதி தாயை வழிபட்டனர். ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் கயிறு அணிந்து கொண்டனர்.

இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஆடிப்பெருக்கு கொண்டாடினர்.



500-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் முளைப்பாரி எடுத்து அரசமரம் சின்னக்கடை வீதி டி.எஸ் கார்னர் பெரிய கடை வீதி எண்பேட்டை 5 சாலை சந்திப்பு வழியாக அமராவதி ஆற்றை வந்து அடைந்தனர்.



அங்கு அவர்கள் கொண்டு வந்த முளைப்பாரிகளை அமராவதி ஆற்றில் விட்டனர்.



அமராவதி ஈஸ்வரன் கோவிலில் வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் முருக பெருமானை பற்றி பாடி வள்ளி கும்மியாட்டம் ஆடினர்.



அதனைத் தொடர்ந்து அங்கு விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டு இருந்தது அங்கே ஏராளமான குழந்தைகள் சிறுவர்கள் பெரியவர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.



முளைப்பாரி ஊர்வலத்தின் போது இளைஞர்கள் ட்ரம் செட் அடித்து ஆட்டம் பாட்டம் போட்டு தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Newsletter

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...