பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் குப்பையில் தீயிட்டு எரிப்பு - அதிர்ச்சி!

பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் கொடுக்கும் மனுக்கள், உத்தரவுகள் சீல் வைக்கப்பட்டு, கையெழுத்திடப்பட்ட நிலையில், அலுவலகத்தின் பின்புறம் தீயிட்டு எரிக்கப்பட்டு கிடந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் குப்பையில் கொட்டப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், 20 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய பல்லடம் தாலுக்கா வட்டாட்சியராக ஜெய்சிங் சிவக்குமார் என்பவர் உள்ளார். மேலும் பொதுமக்கள் அன்றாடம் அளிக்கும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு பின்னர் சம்பந்தப்பட்ட மனுதாரருக்குறிய தீர்வு காணப்படுவது வழக்கம்.



இந்நிலையில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் கொடுக்கும் மனுக்கள், உத்தரவுகள் சீல் வைக்கப்பட்டு, கையெழுத்திடப்பட்டவை அலுவலக பின்புறமாக குப்பையில் எரிக்கப்பட்டு கிடந்ததை கண்டு அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.



இந்நிலையில் துணை ஆட்சியர் சுதன் ஜெய் நாராயணன் தலைமையில் ஆய்வு கூட்டம் தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்று கொண்டிருந்தது.



இதனையடுத்து கூட்டம் முடிந்து வெளியே வந்த துணை ஆட்சியரிடம் குப்பையில் கிடந்த மனுக்களை பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

பின்னர் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இச்சம்பவம் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...