பல்லடம் அருகே மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 கேட்டு கூலி தொழிலாளியிடம் டாஸ்மாக் விற்பனையாளர் வாக்குவாதம் - பரபரப்பு

பல்லடம் அடுத்த செட்டிபாளையம் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் மது வாங்க வந்த கூலி தொழிலாளியிடம் விற்பனையாளர் குவாட்டர் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 தர வலியுறுத்தியதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் குவாட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் கேட்டு டாஸ்மாக் விற்பனையாளர் கூலித் தொழிலாளியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



பல்லடம் அருகேயுள்ள செட்டிபாளையம் சாலையில் 1830 எண் கொண்ட டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இப்பகுதியில் செயல்பட்டு வரும் கடையை மூடக்கோரி வரும் 8 ஆம் தேதி பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 20 அடி தொலைவில் குடியிருப்புக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அமைந்த பகுதியில் செயல்பட்டு வரும் இந்த டாஸ்மாக் கடைக்கு மதுபாட்டில் வாங்க வந்த கூலித்தொழிலாளியிடம் விற்பனையாளர் குவாட்டருக்கு கூடுதலாக 10 ரூபாய் கேட்டுள்ளார்.



அதற்கு தொழிலாளி பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சரே பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வாங்க கூடாது என உத்தரவு பிறப்பித்திருக்கிறார் என கேட்டார். அதற்கு டாஸ்மாக் கடை விற்பனையாளர் கூறும் போது அமைச்சர் சொன்னது அடுத்த மாதத்தில் இருந்து தான் வாங்க கூடாது என கூறியிருப்பதாக கூறி கொடுத்த குவாட்டர் பாட்டிலை வாங்கி வைத்து கொண்டதாக கூறப்படுகிறது.

பின்னர் தொழிலாளி வாக்குவாதத்தில் ஈடுபடவே ஒரு கட்டத்தில் விற்பனையாளர் பணத்தை திருப்பி கொடுத்துள்ளார். சம்பவம் குறித்து பேசிய வாடிக்கையாளர் அமைச்சரே கூலித்தொழிலாளியின் உடம்பு வலிக்கு குடிப்பதாக கூறியிருப்பதாக ஆறுதல் வார்த்தை கூறியிருக்கும் நிலையில், டாஸ்மாக் ஊழியர் அடாவடியாக நடந்துகொள்வதாக வேதனை தெரிவித்தார்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...