துடியலூர் அருகே ஆடி சொகுசு காரை ஓட்டி வந்து விபத்து - இருசக்கர வாகனத்தில் வந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி…!

கேரளா மாநிலம் ஆனைகட்டி சேர்ந்தவர் விஷ்ணு (26), அவருடன் துடியலூர் சேர்ந்த சையது முகமது (30), கேரளா ஆனைகட்டி அகழி பகுதியைச் சேர்ந்த மிதுனியம் (27), இவர் நேற்று மது போதையில் தனது ஆடி சொகுசு காரை ஓட்டிக்கொண்டு வடமதுரையில் இருந்து பழனி கவுண்டன்புதூர் செல்லும் சாலையில் வேகமாக ஓட்டிச் சென்றார்.



கோவை: கேரளா மாநிலம் ஆனைகட்டி சேர்ந்தவர் விஷ்ணு (26) இவர் நேற்று மது போதையில் தனது ஆடி சொகுசு காரை ஓட்டிக்கொண்டு வடமதுரையில் இருந்து பழனி கவுண்டன்புதூர் செல்லும் சாலையில் வேகமாக ஓட்டிச் சென்றார். 

அவருடன் துடியலூர் சேர்ந்த சையது முகமது (30) கேரளா ஆனைகட்டி அகழி பகுதியைச் சேர்ந்த மிதுனியம் (27), ஆகியோர் சென்றனர். 



அப்போது அதிவேகமாக வந்து பழனிகவுண்டன் புதூர் செல்லும் சாலையில் திருப்ப முயன்றது போது கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார், சாலையில் வந்த இருசக்கர வாகனத்தில் வந்த கோவை பன்னிமடை பகுதியைச் சேர்ந்த அஜய் (29), என்பவர் மீது மோதி, பின்னால் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த கோவை ரோஸ்கார்டன் தென்றல் நகரை சேர்ந்த சசிரேகா (29) என்ற பெண் மீதும் மோதியது. 



இதில் சசிரேகா பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அஜய் லேசான காயங்களுடன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற துடியலூர் போலீசார் மது போதையில் காரில் ஓட்டி வந்த விஷ்ணு பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



மது போதையில் ஓட்டி வந்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து இருவர் மீது மோதி சாலை ஓரத்தில் இருந்த புதர்க்குள் சென்று நின்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...