தாராபுரம் அருகே மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப பதிவு மையங்களில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு!

தாராபுரம், குண்டடம் மற்றும் மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப பதிவு முகாம்களில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.


திருப்பூர்: தாராபுரம் வட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் மகளிர் உரிமை திட்ட முகாம்களில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

தாராபுரம், குண்டடம் மற்றும் மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற்று வருகிறது.



இந்த மையங்களில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆய்வு செய்தார்.



விண்ணப்ப பதிவு மையங்களை ஆய்வு மேற்கொண்ட ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் கூறியதாவது,

தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கை தரத்தை உயர்த்தி சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு விண்ணப்ப பதிவு முகாம்கள் இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக தற்போது நடைபெற்று வரும் முகாம்களுக்கு விண்ணப்பபடிவங்கள் மற்றும் டோக்கன்கள் ஒவ்வொரு வீடுகளுககும் நேரடியாக சென்று வழங்கப்பட்டது.

முதல் கட்டமாக கடந்த 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை 2,86,631 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2ஆம் கட்டமாக, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் விண்ணப்ப பதிவு செய்யும் பணிகள் வருகிற 5ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-3 மற்றும் மண்டலம்-4 ஆகிய பகுதிகளுக்குட்பட்ட 30 வார்டுகளிலும், 6 நகராட்சி மற்றும் 15 பேரூராட்சிகளிலும் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.



தாராபுரம் ஊராட்சி ஒன்றியம், நஞ்சியம்பாளையம் ஊராட்சி, குப்பிச்சிபாளையம் நியாயவிலைக்கடை, நஞ்சியம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம், தொப்பம்பட்டி ஊராட்சி வரப்பாளையம் சமுதாய நலக்கூடம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், சூரியநல்லூர் ஊராட்சி, வேங்கிபாளையம் அங்கன்வாடி மையம், கண்ணாங்கோவில் ஊராட்சி மன்ற அலுவலகம், மூலனூர் ஊராட்சி ஒன்றியம். பொன்னிவாடி ஊராட்சி எலுக்காம்வலசு.

கிளாங்குண்டல் ஊராட்சி பட்டுத்துறை, குமாரபாளையம் ஊராட்சி தம்மங்கரை, கோட்டைமருதூர் ஊராட்சி பிச்சைக்கல்பட்டி, கம்பளியம்பட்டி, தூரம்பாடி ஊராட்சி நத்தப்பாளையம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப பதிவு மையத்தை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, தாராபுரம் ஆர்.டி.ஓ செந்தில் அரசன், தாராபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் தன செந்தில்குமார். தாராபுரம் தாசில்தார் ஜெகஜோதி, வட்ட வழங்கல் அலுவலர் செந்தில் பிரபு, நஞ்சியம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிகாந்த், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார், இளைஞரணி அமைப்பாளர் சன்பாலு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...