அண்ணாமலையின் பாதயாத்திரையை யாரும் ரசிக்கவில்லை - தபெதிக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் விமர்சனம்!

மணிப்பூர் மாநில மக்களுக்காக அழுது கொண்டிருக்கின்ற நிலையில், அண்ணாமலையின் பாதயாத்திரையை யாரும் ரசிக்கவில்லை என திருப்பூரில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரின் காயக்கட்டு ஊர்வலத்தில் கலந்து கொண்ட பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.



திருப்பூர்: அண்ணாமலையின் பாதயாத்திரையை யாரும் ரசிக்கவில்லை என தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வரக்கூடிய நிலையில் இதில் ஏராளமானோர் கை, கால்களை இழந்தும், உடல் அளவிலும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

மேலும் பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.



இந்த நிலையில் மணிப்பூர் மாநில மக்களின் நிலைமையை உணர்த்தும் வகையில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் திருப்பூரில் தந்தை பெரியார் சிலையிலிருந்து மாநகராட்சி அலுவலகம் வரை கை, கால்களை இழந்தது போலவும், உடல் முழுவதும் காயங்கள் பட்டது போல கட்டு அணிந்து ஊர்வலமாக சென்றனர்.



மேலும், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மாநகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் பேசியதாவது,



மணிப்பூர் மாநிலத்திற்கு இந்தியாவில் எங்கும் இல்லாத அளவு தமிழகத்தில் ஆதரவு குரல் இருந்து வருகிறது.

தமிழக முதல்வர் மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்களுக்கு அடைக்கலமும், ஆதரவும் தருவதாக தெரிவித்தது வரவேற்கத்தக்கது. இதனை திசை திருப்பவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை செல்ல இருக்கிறார்.

மணிப்பூர் மக்களுக்காக கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க மக்கள் அண்ணாமலையின் பாதயாத்திரையை ரசிக்கவில்லை, இது தமிழக மக்களிடம் எடுபடாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...