பாமக தலைவர் அன்புமணி கைதை கண்டித்து உடுமலையில் அரசு பேருந்துகளை பாமகவினர் சிறைபிடித்ததால் பரபரப்பு!

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாசை போலீசார் கைது செய்ததை கண்டித்து, உடுமலையில் அரசு பேருந்துகளை பாமகவினர் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து உடுமலையில் அரசு பேருந்துகளை சிறைபிடித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாசை போலீசார் கைது செய்தனர்.



இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் இரா. பழனிச்சாமி தலைமையில் அரசு பேருந்தை சிறைபிடித்து 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மேற்கு மாவட்ட தலைவர் சிங்காரவேல், மாவட்ட மாவட்ட அமைப்பு செயலாளர் மனோகரன், மாவட்ட துணைத் தலைவர் வாளவாடி பழனிச்சாமி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மின்னல் செந்தில், குடிமங்கலம் ஒன்றிய ஊடக பேரவை செயலாளர் மகேந்திரவர்மன், மாவட்ட துணை செயலாளர் நாகராஜ் துணைச் செயலாளர் நாகராஜ் மாவட்ட ஊடகப் பேரவை செயலாளர் கனகராஜ் உடுமலை நகர செயலாளர் பிரபாகரன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...