பாமக தலைவர் அன்புமணி கைதை கண்டித்து உடுமலையில் அரசு பேருந்துகளை பாமகவினர் சிறைபிடித்ததால் பரபரப்பு!

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாசை போலீசார் கைது செய்ததை கண்டித்து, உடுமலையில் அரசு பேருந்துகளை பாமகவினர் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து உடுமலையில் அரசு பேருந்துகளை சிறைபிடித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாசை போலீசார் கைது செய்தனர்.



இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் இரா. பழனிச்சாமி தலைமையில் அரசு பேருந்தை சிறைபிடித்து 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மேற்கு மாவட்ட தலைவர் சிங்காரவேல், மாவட்ட மாவட்ட அமைப்பு செயலாளர் மனோகரன், மாவட்ட துணைத் தலைவர் வாளவாடி பழனிச்சாமி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மின்னல் செந்தில், குடிமங்கலம் ஒன்றிய ஊடக பேரவை செயலாளர் மகேந்திரவர்மன், மாவட்ட துணை செயலாளர் நாகராஜ் துணைச் செயலாளர் நாகராஜ் மாவட்ட ஊடகப் பேரவை செயலாளர் கனகராஜ் உடுமலை நகர செயலாளர் பிரபாகரன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...