பாமக தலைவர் அன்புமணி கைதை கண்டித்து உடுமலையில் அரசு பேருந்துகளை பாமகவினர் சிறைபிடித்ததால் பரபரப்பு!

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாசை போலீசார் கைது செய்ததை கண்டித்து, உடுமலையில் அரசு பேருந்துகளை பாமகவினர் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து உடுமலையில் அரசு பேருந்துகளை சிறைபிடித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாசை போலீசார் கைது செய்தனர்.



இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் இரா. பழனிச்சாமி தலைமையில் அரசு பேருந்தை சிறைபிடித்து 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மேற்கு மாவட்ட தலைவர் சிங்காரவேல், மாவட்ட மாவட்ட அமைப்பு செயலாளர் மனோகரன், மாவட்ட துணைத் தலைவர் வாளவாடி பழனிச்சாமி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மின்னல் செந்தில், குடிமங்கலம் ஒன்றிய ஊடக பேரவை செயலாளர் மகேந்திரவர்மன், மாவட்ட துணை செயலாளர் நாகராஜ் துணைச் செயலாளர் நாகராஜ் மாவட்ட ஊடகப் பேரவை செயலாளர் கனகராஜ் உடுமலை நகர செயலாளர் பிரபாகரன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...