பாமக தலைவர் அன்புமணி கைதை கண்டித்து உடுமலையில் அரசு பேருந்துகளை பாமகவினர் சிறைபிடித்ததால் பரபரப்பு!

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாசை போலீசார் கைது செய்ததை கண்டித்து, உடுமலையில் அரசு பேருந்துகளை பாமகவினர் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து உடுமலையில் அரசு பேருந்துகளை சிறைபிடித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாசை போலீசார் கைது செய்தனர்.



இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் இரா. பழனிச்சாமி தலைமையில் அரசு பேருந்தை சிறைபிடித்து 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மேற்கு மாவட்ட தலைவர் சிங்காரவேல், மாவட்ட மாவட்ட அமைப்பு செயலாளர் மனோகரன், மாவட்ட துணைத் தலைவர் வாளவாடி பழனிச்சாமி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மின்னல் செந்தில், குடிமங்கலம் ஒன்றிய ஊடக பேரவை செயலாளர் மகேந்திரவர்மன், மாவட்ட துணை செயலாளர் நாகராஜ் துணைச் செயலாளர் நாகராஜ் மாவட்ட ஊடகப் பேரவை செயலாளர் கனகராஜ் உடுமலை நகர செயலாளர் பிரபாகரன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...