தாராபுரத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு - அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை!

தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.3 கோடி மதிப்பிலான பல்வேறு கோயில்களுக்கு சொந்தமான 13 ஏக்கர் 12 சென்ட் நிலங்கள் நீதிமன்ற உத்தரவின் படி மீட்கப்பட்டு, கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.



திருப்பூர்: தாராபுரம் அருகே ரூ.3 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் நீதிமன்ற உத்தரவின் படி மீட்கப்பட்டும் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

தாராபுரம் அருள்மிகு காடு அனுமந்தராயர் சுவாமி கோயிலுக்கு சொந்தமான 10.98 ஏக்கர் நன்செய் நிலம் தாமாக முன் வந்து ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல், கோனாபுரம் அருள்மிகு லட்சுமி நாராயணசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 2.14 ஏக்கர் நன்செய் நிலம், தனி நபரிடம் இருந்தது. இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட வருவாய் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.



இந்த வழக்கில் கோயிலுக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில் திருப்பூர் மண்டல இணை ஆணையர் குமர துரை உத்தரவின் பேரில், திருப்பூர் மாவட்ட உதவி ஆணையர் ஜெய தேவி தலைமையில், கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டது.



இதன்படி, சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 13 ஏக்கர் 12 சென்ட் கோயிலுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலம் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்ட ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் மகேஸ்வரன், திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் குருராஜன், தாராபுரம் சரக ஆய்வாளர் ஆதிரை, செயல் அலுவலர் மல்லிகா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் இணைந்து தாராபுரம் நகரில் 13 ஏக்கர் 12 சென்ட் நிலம் திருக்கோவிலுக்கு சுவாதீனம் பெறப்பட்டது.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...