தாராபுரம் அருகே அரிசி ஆலையில் இரும்பு கம்பிகளை திருடிய வாலிபர் கைது!

தாராபுரம் - பழனி சாலையில் செயல்பட்டு வரும் அரிசி ஆலையில் வைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பிகளை திருடிச்சென்ற தாராபுரம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த தில்லைமுத்து (23) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 30 கிலோ இரும்பு கம்பிகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவரது கூட்டாளிகள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே வரும் அரிசி ஆலையில் வைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பிகளை திருடிச்சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தாராபுரம் - பழனி சாலையில் செயல்பட்டு வரும் அரிசி ஆலையில் வைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பிகள் சமீபத்தில் திருட்டு போனது. இது குறித்து அரிசி ஆலையின் மேலாளர் செந்தில்நாதன் தாராபுரம் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தாராபுரம் உதவி காவல் ஆய்வாளர் கருப்புசாமி தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தாராபுரம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த தில்லைமுத்து (23) மற்றும் இவரது கூட்டாளிகளான தீனா (23), கவுதம் (23) ஆகிய 3 பேர் இரும்பு கம்பிகளை திருடியது தெரியவந்தது.



இதில் தில்லைமுத்து மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இவரிடமிருந்து 30 கிலோ இரும்பு கம்பிகளை பறிமுதல் செய்தனர். மேலும் இவரது கூட்டாளிகளான கவுதம் மற்றும் தீனா ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...