மூலனூர் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1.25 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு!

மூலனூர் அடுத்த வண்ணாப்பட்டி ரங்கநாதபெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான 23.5 ஏக்கர் புஞ்சை நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து, அறநிலையத்துறை உதவி ஆணையர் பி.ஜெயாதேவி முன்னிலையில் மீட்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: மூலனூர் அருகேயுள்ள ரங்கநாதபெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான 23.5 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மூலனூரை அடுத்த கொமாரபாளையம் கிராமம் வண்ணாப்பட்டி ரங்கநாதபெருமாள் கோவிலுக்கு சொந்தமான 23.5 ஏக்கர் புஞ்சை நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரின் அறிவுறுத்தலின் படி திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பி.ஜெயாதேவி முன்னிலையில் ஆக்கிரமிப்பில் இருந்த கோவில் நிலம் மீட்கப்பட்டது.

அப்போது தனி தாசில்தார் மகேஸ்வரன், செயல் அலுவலர், ஆய்வாளர் மற்றும் கோவில் பணியாளர்கள் உடன் இருந்தனர். ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட ரங்கநாத பெருமாள் கோவில் நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...