ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை விற்பனை செய்ய வேண்டும் - விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

ரேஷன் கடைகளில் பாமாயிலை தடை செய்து தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும். கள்ளுக்கு உண்டான தடையை நீக்குவது உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தேங்காயை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை விற்பனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருப்பூரில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ரேஷன் கடைகளில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கிட வேண்டும். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை போல் தமிழகத்தில் கள்ளுக்கு உண்டான தடையை நீக்க வேண்டும். தேங்காய் ஏற்றுமதியில் உள்ள இடர்பாடுகளை களைய வேண்டும்.

உரித்த பச்சை தேங்காய் கிலோ ஒன்றுக்கு 50 வீதம் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும். கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு 140 நிர்ணயம் செய்திட வேண்டும்.

தென்னை சார்ந்த உபபொருட்களான நார் தொழில், நார் துகள்கள் போன்ற மதிப்பு கூட்டி சந்தைப்படுத்தும் தொழிலுக்கான இடர்பாடுகாளை களைய வேண்டும்.



இவ்வாறான 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் ஏர் முனை இளைஞர் அணி மற்றும் திருப்பூர், கோவை மாவட்ட தென்னை விவசாயிகள் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் தேங்காயை சாலையில் உடைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.



இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...