கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது - 1.15 கிலோ கஞ்சா பறிமுதல்!

பெரியநாயக்கன்பாளையம் எல்.எம்.டபுல்யூ பாலம் அருகே போலீசாரின் ரோந்து பணியின் போது, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனாட்சி சுந்தரம், விஷ்ணு சங்கர் ஆகிய இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறார். இந்த நிலையில் கோவை பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப் பகுதியில் கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபட்டு வருவதாக பெரிய நாயக்கன்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் பெயரில் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் தலைமையிலான காவலர்கள் பெரியநாயக்கன் பாளையம் எல்.எம்.டபுல்யூ பாலம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம், விஷ்ணு சங்கர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் அவர்கள் அங்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Newsletter

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...