கோவையில் பைக் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்கள் விபத்தில் பலி - இருவரும் சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பியவர்கள்!

கோவை பஜார் வீதியில் கடந்த 22ஆம் தேதி நள்ளிரவில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், அந்த வாகனம் பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் விபத்தில் சிக்கியதில், 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். விசாரணையில் இருவரும் செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பிச் சென்றவர்கள் என தெரியவந்துள்ளது.


கோவை: கோவையில் இருசக்கர வாகனத்தை திருடி, செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் துணிகர கொள்ளை சம்பவங்கள் பல்வேறு கொள்ளை கும்பலால் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கோவை பஜார் பகுதியில் ஒரு விலை உயர்ந்த ட்யூக் வாகனத்தை இரவில் ஒரு கொள்ளை கும்பல், திருட்டு பைக்கில் வந்து லாவகமாக கொள்ளையடித்து சென்றனர்.



மேலும் அவர்கள் அங்கிருந்த சிசிடிவி கேமராவுக்கு டாட்டா காட்டிவிட்டு சென்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.



இந்த நிலையில் பொள்ளாச்சியில் பொதுமக்கள் அதிக நடமாட்டம் கொண்ட பகுதியில் வழிப்பறி கொள்ளையர்கள் ஒரு பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துவிட்டு தப்பியோடினர். அந்த கொள்ளையர்கள் பயன்படுத்திய பைக்கானது, கோவையில் லாவகமாக திருடப்பட்ட டியூக் பைக் என தெரியவந்தது.

எனவே இரவில் பைக் திருட்டு, பகலில் திருடிய பைக்கில் பயணித்து வழிப்பறியில் ஈடுபடுகின்றனரா என்ற கேள்வி எழுந்தது. இந்த கொள்ளை கும்பலை பிடிக்க பொதுமக்கள் போலிசாரை வலியுறுத்தினர். வழிப்பறி கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.



இந்நிலையில் நேற்று நள்ளிரவு பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் இருசக்கர வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், விபத்திற்குள்ளான இருசக்கர வாகனமானது, பசார் வீதியில் திருடப்பட்ட இருசக்கர வாகனம் என தெரியவந்தது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இறந்த 2 இளைஞர்களும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து தப்பி வந்தவர்கள் என தெரியவந்தது. கடந்த 6ஆம் தேதி செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் இருந்து இளைஞர்கள் 5 பேர் தப்பினர்.

இந்த நிலையில் சஞ்சய் மற்றும் ஹரிமதன் ஆகிய இந்த 2 இளைஞர்களும், இருசக்கர வாகனங்களை திருடிச்சென்று, செயின் பறிப்பிலும் ஈடுபட்ட நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இவர்களுடன் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்து தப்பிச்சென்ற மற்ற இரு நபர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...

Heavy Rain, Strong Winds Lash Thudiyalur and Surrounding Areas

Heavy rain accompanied by strong winds lashed Thudiyalur and several parts of Coimbatore’s northern outskirts for more t...

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

கோவை துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...