கோவையில் பைக்கை திருடிவிட்டு சிசிடிவிக்கு டாட்டா காட்டிவிட்டு சென்ற கொள்ளையர்கள் - போலீஸ் வலைவீச்சு!

கோவை பெரிய கடை வீதியை சேர்ந்த ஐடி ஊழியர் சுரேஷ் தனது வீட்டில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள், அங்கிருந்த சிசிடிவி கேமராவுக்கு டாட்டா காட்டிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



கோவை: கோவையில் விலை உயர்ந்த பைக்கை திருடிவிட்டு சிசிடிவி கேமராவுக்கு டாட்டா காட்டி விட்டு சென்ற கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை பெரிய கடை வீதியை சேர்ந்த ஐடி ஊழியரான சுரேஷ் சமீபத்தில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை 22ஆம் தேதி வழக்கம் போல் பணிக்கு சென்று விட்டு தனது வீட்டில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார்.

இரவு உறங்கிவிட்டு பின் மறுநாள் காலை சென்று பார்த்தபோது அவரது பைக் மாயமானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சுரேஷ், பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.



அப்போது நள்ளிரவில் அவ்வழியாக பைக்கில் வந்த இரண்டு கொள்ளையர்கள் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து திருடி சென்றது தெரியவந்தது.



மேலும் வாகனத்தை திருடி செல்வதற்கு முன் சிசிடிவி கேமராவை பார்த்து டாட்டா காட்டியுள்ளனர்.



இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் கொள்ளையர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...

சென்னை-கோவை விமானக் கட்டணம் ரூ.16,500 ஆக உயர்வு: தொடர் விடுமுறை காரணம்

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.4,966-இலிருந்து ரூ.16,496 ஆக பல...

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளி ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் ஊர்வலம் நடைபெற்றது. இயேசு சிலுவையைச் சுமந்து செல்லும்...

ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நெசவாளர்கள் கூட்டமைப்பு - இலவச மின்சாரம் வேண்டும்

ஈரோட்டில் தமிழக நெசவாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து மனு அளித்தனர். கைத்தறி மற்றும் விசைத்தறி...

நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து இலவச மின்சாரம் வழங்க மனு

Erode மாவட்டத்தில் முதல்வர் Stalin ஐ சந்தித்த தமிழ்நாடு நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள், தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்ற இ...