பாஜக அரசை கண்டித்து தாராபுரத்தில் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!

மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தாராபுரத்தில் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் சத்யா பழனிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



திருப்பூர்: தாராபுரத்தில், திமுக மகளிர் அணி சார்பில், மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசை கண்டித்து 500க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், திமுக மகளிர் அணி சார்பில், மணிப்பூரில் மகளிருக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த முடியாத மோடி தலைமையிலான, ஒன்றிய பாசிச பாஜக அரசையும், மணிப்பூரில் ஆட்சி செய்யும் பாஜக அரசையும் கண்டித்து, தாராபுரம் அண்ணா சிலை முன்பு தி.மு.க. மகளிர் அணி சார்பில், மாநில மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் சத்யா பழனிக்குமார் தலைமையில், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மணிப்பூரில் ஆட்சி செய்யும் பாஜக அரசை கட்டுப்படுத்த தவறிய மோடி தலைமையிலான மத்திய பாசிச பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி, பாஜக அரசின் மீது உள்ள தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.



இந்நிகழ்சியில், திருப்பூர் தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அனிதா செல்வராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட மகளிர் அணி தலைவருமான சரஸ்வதி ராஜேந்திரன் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள், காங்கயம், தாராபுரம் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திமுக மகளிர் அணி சார்பில், சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...