பாஜக அரசை கண்டித்து தாராபுரத்தில் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!

மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தாராபுரத்தில் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் சத்யா பழனிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



திருப்பூர்: தாராபுரத்தில், திமுக மகளிர் அணி சார்பில், மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசை கண்டித்து 500க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், திமுக மகளிர் அணி சார்பில், மணிப்பூரில் மகளிருக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த முடியாத மோடி தலைமையிலான, ஒன்றிய பாசிச பாஜக அரசையும், மணிப்பூரில் ஆட்சி செய்யும் பாஜக அரசையும் கண்டித்து, தாராபுரம் அண்ணா சிலை முன்பு தி.மு.க. மகளிர் அணி சார்பில், மாநில மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் சத்யா பழனிக்குமார் தலைமையில், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மணிப்பூரில் ஆட்சி செய்யும் பாஜக அரசை கட்டுப்படுத்த தவறிய மோடி தலைமையிலான மத்திய பாசிச பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி, பாஜக அரசின் மீது உள்ள தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.



இந்நிகழ்சியில், திருப்பூர் தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அனிதா செல்வராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட மகளிர் அணி தலைவருமான சரஸ்வதி ராஜேந்திரன் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள், காங்கயம், தாராபுரம் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திமுக மகளிர் அணி சார்பில், சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...