மணிப்பூர் கலவரம் - பாஜக அரசை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

மணிப்பூர் கலவரத்தையொட்டி 2 பழங்குடி பெண்களை நிர்வாணமாக அழைத்து சென்ற சம்பவத்தை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கலவரத்தை தடுக்க தவறிய பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.



கோவை: மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும் பிரதமர் மோடி பதவி விலக கோரியும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மணிப்பூரில் தொடர்ந்து கலவரம் நடைபெற்று வரும் நிலையில் இரண்டு பெண்களை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கோவையில் காங்கிரஸ் கட்சியினர் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மத்திய தந்தி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும், பாஜக அரசை கண்டித்தும் பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர், செய்தியாளர்களை சந்தித்த மயூரா ஜெயக்குமார் பேசியதாவது,

மணிப்பூரில் பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்று வருகிறது. 2 பெண்கள் நிர்வாணமாக ஆடைகள் களையப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர்.

பழங்குடியினர் மக்களை காக்க தவறிய மோடி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். வருகின்ற தேர்தலில் மக்கள் மோடிக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...

பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் மற்றும் வனங்கள் தினம் கொண்டாடப்பட்டது

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் மார்ச் 28 அன்று கொ...