கோவை ஆட்சியர் அலுவலகத்திற்குள் நிலத்தகராறில் இரு தரப்பினர் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு!

கோவையை சேர்ந்த பெண் ஒருவரிடம் நிலத்திற்காக ரூ.50 லட்சம் பணத்தையும் பெற்றுக்கொண்டு நிலத்தை கிரையம் செய்து தராததால், பணத்தை தந்த தரப்பினர் மற்றும் ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்த பெண் தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: நிலத்தகராறு சம்பந்தமாக இரு தரப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே சண்டையிட்டு கொண்டதால் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த ஒரு பெண்ணின் நிலத்தை ஒரு தரப்பினர் கேட்டதாக தெரிகிறது. அதற்கு 50 லட்சம் ரூபாய் விலை பேசிய நிலையில் நிலத்தை வாங்கும் தரப்பினர் 50 லட்சம் ரூபாய் பணத்தை அப்பெண்ணிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அப்பெண் நிலத்தை கிரையம் செய்து தராமல் 50 லட்சம் ரூபாய் பணத்துடன் தலைமறைவானதாக பணத்தை கொடுத்த தரப்பினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இது குறித்து பணத்தை இழந்த தரப்பினர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்தனர்.

தற்போது அந்த சிவில் வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அப்பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தனது இடத்தில் அத்துமீறி சிலர் கட்டிடம் கட்டி வருவதாக புகார் மனு ஒன்றை அளிக்க வந்துள்ளார். இதனையறிந்த பணத்தை கொடுத்த நபர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பெண்ணிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பி உள்ளனர்.

வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாக அப்பெண் கூறிய நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.



வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.



அப்போது அப்பெண்ணின் தரப்பினர் காரில் புறப்பட முயன்ற நிலையில் பணத்தை கொடுத்த தரப்பினர் அவர்களை செல்ல விடாமல் தடுத்து கார் சாவியை பிடுங்கிக் கொண்டனர்.



மேலும் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி கொண்டனர்.



இதனிடையே அப்பெண் தங்களது சொத்தை அபகரிக்க முயல்வதாகவும் தங்களை தாக்குவதாகவும் கூறி தங்களை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கதறினார். தங்களை தாக்க வந்தவர்கள் யார் என்று தெரியாது எனவும் கூறினார். மேலும் தங்களை கொலை செய்ய பார்ப்பதாகவும் கூறி கதறி அழுதார்.

இதனிடையே 50 லட்சம் ரூபாய் வாங்கியதையும் அப்பெண் ஒப்புகொள்கிறார். ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு செல்வதால் நீதிமன்றம் வாயிலாக பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அப்பெண் கூறுகிறார்.



இவர்களின் இந்த சண்டையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கோவை மாநகர பொருளாதர குற்றப்பிரிவு போலீசார் இருதரப்பினரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மேலும் அப்பெண் வந்த காரையும் காவல் துறையினர் எடுத்துச் சென்றனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...