உடுமலை மலை கிராமங்களில் மருத்துவ வசதி இல்லாததால் அதிகரிக்கும் உயிரிழப்பு!

உடுமலை அடுத்த அமராவதி வனச்சரக பகுதியில் உள்ள மலை கிராமங்களில் மருத்துவ வசதி இல்லாதால், நேற்று முன் தினம் ஒருவர் உயிரிழந்த நிலையில், மலைகிராமங்களில் நிரந்தர மருத்துவ வசதி வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.



திருப்பூர்: உடுமலை மலை கிராமங்களில் பழங்குடியின மக்கள், நோயாளிகளை தொட்டில் கட்டி தூக்கிச் செல்லும் அவலம் அரங்கேறி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்குட்பட்ட உடுமலை - அமராவதி வனச்சரக பகுதியில் குருமலை, குழிப்பட்டி, மாவடைப்பு, தளிஞ்சி உட்பட 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.

இங்கு ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். மலைவாழ் கிராமங்களுக்கு வனத்துறை சார்பில் சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தாலும் மருத்துவ வசதி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.

இந்த கிராமங்களில் அவ்வப்போது சுகாதார துறை சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றாலும் அவசர தேவைக்கு சமவெளிப் பகுதிக்கு செல்லும் நிலை தான் உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் குருமலை கிராமத்தில் பழனிச்சாமி என்பவருக்கு உடல்நிலை கடுமையாக பாதிப்பு ஏற்பட்டது.



அரசு மருத்துவமனைக்கு செல்ல பாதை இல்லாத காரணத்தால் தொட்டிலில் வைத்து ஒரு கம்பத்தில் கட்டி தூக்கி தூக்கிச் சென்றனர்.



குருமலை பகுதியில் இருந்து குழிப்பட்டி வரை சுமார் 6 கிலோமீட்டர் தூரம் வரை பாறைகளில் நடந்து வந்து அங்கிருந்து 9 கிலோமீட்டர் சாலை வழித்தடத்தில் நடந்து பொன்னால் அம்மன் சோலைக்கு தூக்கிச் சென்றனர்.

பின்னர் அங்கிருந்து ஆம்புலன்சை வரவழைத்து உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் காலதாமதமாக அரசு மருத்துவமனைக்கு வந்த நிலையில்.



தற்போது பழனிச்சாமி உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

எனவே அமராவதி வனச்சரக மலைவாழ் கிராமங்களான குருமலை, குழிப்பட்டி, மாவடைப்பு, முள்ளு பெட்டி, தளிஞ்சி, ஈசல் திட்டு உட்பட மலைவாழ் கிராமங்களில் நிரந்தர மருத்துவ வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற மலைவாழ் மக்கள் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறுமா என்பது மலைவாழ் மக்களின் தற்போது வரை கனவாக உள்ளது.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...