பன்னிமடை அரசு பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ!

துடியலூர் அடுத்த பன்னிமடை அரசு மேல்நிலை பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பில் முதலிடம் பிடித்த 21 மாணவர்களுக்கு, பெருந்தலைவர் காமராஜர், முன்னாள் எம்.எல்.ஏ தியாகி வெ.எல்லமநாயுடு பொதுநல அறக்கட்டளை சார்பில் 10ஆம் ஆண்டாக மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகையை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி. அருண்குமார் வழங்கினார்.



கோவை: பன்னிமடை அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி. அருண்குமார் வழங்கினார்.

கோவை துடியலூர் அடுத்த பன்னிமடை அரசு மேல்நிலை பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர், முன்னாள் எம்.எல்.ஏ தியாகி. வெ.எல்லமநாயுடு பொது நல அறக்கட்டளை சார்பில் 10ம் ஆண்டு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா அனைவரையும் வரவேற்று பேசினார். அறக்கட்டளை தலைவர் ஆறுமுகசந்திரமோகன் தலைமை தாங்கினார். முன்னாள் ஓன்றிய கவுன்சிலர், அறக்கட்டளை பொதுச்செயலாளர் ஆர்.வி.சி. என்.நடராஜன் அறிமுக உரையாற்றினார்.

முன்னாள் தலைமை ஆசிரியர் கவிஞர் இரவீந்திரன் விழாப் பேரூரையாற்றினார்.



சிறப்பு விருந்தினராக கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்துக்கொண்டு பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி கல்வியில் முதல் இடங்களை பெற்ற 21 மாணவ, மாணவிகளுக்கு சுமார் 40 ஆயிரம் மதிப்புள்ள கல்வி ஊக்கத்தொகைகளை வழங்கி மாணவர்களை பாராட்டி பேசினார்.



மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர்களும் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.



அறக்கட்டளை கெளரவ தலைவர் முத்துகுமாரசாமி, முன்னாள் எம்.எல்.ஏ சின்னராஜ், முன்னாள் அறக்கட்டளை தலைவர் செல்வராஜ், அறாக்கட்டளை கெளரவ ஆலோசகர் செல்லப்பன் ஆகியோர் காமராஜர் மற்றும் எல்லமநாயுடு திருவுருவ படங்களை திறந்து வைத்தனர்.

தொடர்ந்து அறக்கட்டளை பொருளாளர் ராமச்சந்திரன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.



இந்த விழாவில் அறக்கட்டளை குழுவினை சேர்ந்த அறக்கட்டளை செயலாளர்கள் பேரூர் நாகராஜ், அசோக்குமார், ராமசாமி, கணுவாய் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் பாரதிசெல்வம், அறக்கட்டளை சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் பழனிச்சாமி, சின்னு ராமகிருஷ்ண, துரைசாமி என்கிற வெங்கிடசாமி, பாலகிருஷ்ணன் மற்றும் ஒன்றியக்குழு தலைவர் நர்மதா துரைசாமி, பன்னிமடை ஊராட்சித்தலைவர் ரத்தினம் பி.எஸ்.எம்.மருதாசலம், துணைத்தலைவர் அருள்குமார், குருடம்பாளையம் ஊராட்சித்தலைவர் டி.ரவி, பி.டி.மோகன்ராஜ், முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன், துரைசாமி, சுரேஷ்குமார், முன்னாள் துணைத்தலைவர்கள் ராஜப்பன், தாமோதரன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, இணை செயலாளர் காளியப்பன், நிர்வாகிகள் சம்பத், மயில்சாமி, எத்திராஜ், சுந்தர்ராஜ், சுரேந்திரன், ராமச்சந்திரன், மருதாசலம், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மயில்ராணி, துணை தலைவர் லட்சுமி, அரசு ஆரம்ப பள்ளி பி.டி.ஏ தலைவர் டி.பி.ராஜேந்திரன், கவுன்சிலர் கோபாலசாமி உட்பட கவுன்சிலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.



Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...