திருப்பூரில் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாமிற்கான பணிகள் துவக்கம்!

திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முகாமிற்கு தேவையான பொருட்களை பிரித்து அனுப்பும் பணி வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று துவங்கியது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாமிற்கான பணிகள் துவங்கியுள்ளன.

தமிழக அரசு செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்கான பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் இதற்கான விண்ணப்ப பதிவு முகாம் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். இதனிடையே தேர்வு செய்யப்பட்ட தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்ற முடிவடைந்த நிலையில் முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகின்ற 24ஆம் தேதி துவங்கப்பட உள்ளது.

இதற்காக திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட 145 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 1,46,350 ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்ப பதிவு செய்வதற்கு தேவையான பொருட்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் பிரித்து அனுப்பும் பணி இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...