மன அழுத்த நோய் - செல்போனில் மெசேஜ் அனுப்பிவிட்டு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

தாராபுரம் அடுத்த பூங்கா சாலை அருகேயுள்ள வி.எம்.கே நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்வேதா என்ற இளம்பெண் மனநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உறவினருக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பிவிட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: தாராபுரம் அருகே இளம்பெண் ஒருவர் செல்போனில் மெசேஜ் அனுப்பிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் அடுத்த பூங்கா சாலை அருகேயுள்ள வி.எம்.கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி மகள் ஸ்வேதா (21). கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்த ஸ்வேதா நேற்று காலை நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஸ்வேதா தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.



இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தாராபுரம் போலீஸார் ஸ்வேதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



தொடர்ந்து, போலீஸார் நடத்திய விசாரணையில், தீவிர மன அழுத்த நோயால் (ஓ.சி.டி) பாதிக்கப்பட்டிருந்த ஸ்வேதா கடந்த சில ஆண்டுகளாக அதற்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் மன அழுத்தத்துக்கான மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.

இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று ஸ்வேதா வீடு திரும்பியுள்ளார். இதுபோன்று அடிக்கடி ஸ்வோதா தற்கொலைக்கு முயன்றுள்ளாராம். கடந்த சில நாள்களாக தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்வேதா காலையில் தாமதமாகத்தான் எழுவாராம்.

நேற்று காலை 9 மணியாகியும் கதவைத் திறக்காததால், வழக்கம் போல் தாமதமாக எழுவார் என ஸ்வேதாவின் தாய் ராஜாமணி இருந்துள்ளார்.

இந்த நிலையில், காலை, ராஜாமணியை செல்போனில் அழைத்த அவரது சகோதரர் மகள் நித்யா, மன அழுத்த பிரச்னையால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ஸ்வேதா தனக்கு திங்கள்கிழமை இரவு மெசேஜ் அனுப்பியுள்ளாதாக கூறியுள்ளார்.

அதிர்ச்சி அடைந்த ஸ்வேதாவின் தாய், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஸ்வேதா அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவர் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மன அழுத்த பிரச்னையால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...