ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு எதிராக போராட சென்ற நந்தினி மற்றும் தீக்ஷனா கைது!

ஊட்டியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அகில இந்திய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடுவதற்காக சென்ற நந்தினி மற்றும் தீக்ஷனாவை சூலூர் போலீசார் பேருந்தில் வைத்து கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



கோவை: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட சென்ற நந்தினி மற்றும் தீக்‌ஷனாவை போலீசார் பேருந்தில் வைத்து கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அகில இந்திய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஊட்டியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சமூக போராளியான நந்தினி மற்றும் தீக்ஷனா ஆகியோர் சென்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில், அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்த மதுரையிலிருந்து கோவை வரை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில், சூலூர் போலீசார் பேருந்தில் பயணம் செய்த இருவரையும் தடுத்து நிறுத்தி கைது கைது செய்துள்ளனர்.

பின்னர் இருவரையும் சூலூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இருவரையும் கைது செய்வதற்காக போலீசார் அரசு பேருந்துகளை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...