GST வரி கட்டியே மாய்ந்து போன நிலையில் நாம் இருக்கிறோம் - பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வேதனை!

கோவை பச்சாபாளையம் பகுதியில் பால்பண்ணையை திறந்து வைத்து பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், பால் கொள்முதல் விலை உயர்த்த கூறுவதில் நியாயம் இருக்கிறது. ஆனால், தற்போது அனைத்திற்கும் GST வரி கட்டியே மாய்ந்து போன நிலையில் நாம் இருக்கிறோம் என்றார்



கோவை: அனைத்திற்கும் GST வரி கட்டியே மாய்ந்து போன நிலையில் நாம் இருக்கிறோம் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பச்சாபாளையம் பகுதியில் உள்ள மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பால் பண்ணையை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின் போது அங்குள்ள இயந்திரங்களின் செயல்பாடுகள், அவற்றின் பராமரிப்பு ஆகியவற்றை குறித்து கேட்டறிந்தார். மேலும் பால் பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டிங் செய்யப்படுவதையும் ஆய்வு செய்தார்.



இந்நிகழ்வில் அங்குள்ள பணியாளர்களிடமும் அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.



அதனைத் தொடர்ந்து சிறந்த பால் உற்பத்தியாளர்கள், சங்க செயலாளர்கள், கருவூட்டுனர்கள், மற்றும் விற்பனையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



அதன்படி 124 பயனாளிகளுக்கு 2.23 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது,



ஆவின் ஒரு மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம். இதன் மூலம் பலருக்கும் நன்மைகள் உள்ளது. இத்துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.

ஆவினை பொறுத்தவரை விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும், காப்பீடு திட்டத்திலும் ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். யார் வேண்டுமென்றாலும் ஆவின் நிர்வாகிகள், அல்லது DR யை சந்தித்து பேசலாம், அவர்கள் உங்களுக்கு முறையாக வழிக்காட்டுவார்கள் என்ற உத்தரவாதத்தை இத்துறையின் அமைச்சராக நான் கூறி கொள்கிறேன்.

விவசாயிகள் தரும் பாலுக்கு விலையை கூட்டி தர வேண்டும் என கூறுவதில் நியாயம் இருப்பதை மறுக்கவில்லை. தற்போது அனைத்திற்கும் GST போட்டு வரி கட்டியே மாய்ந்து போன நிலைமையில் நாம் இருக்கிறோம்.

எங்கெல்லாம் பால் உற்பத்தியாளர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் சொசைட்டி ஆரம்பிக்கும் பணிகளை செய்ய உள்ளோம். நாம் எடுத்துள்ள முயற்சிகளால் 6% மின் கட்டணம் குறைந்துள்ளது. அனைவரையும் ஒன்றிணைத்து செல்கின்ற அரசை தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் என்று கூறுகிறார்.

ஒரு சாரார் மட்டும் பயனடைந்தார்கள் என்று இருக்க கூடாது என்பது தான் இந்த அரசின் கொள்கை. ஒப்பந்த பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் எவ்வளவு வழங்கலாம் என்பதை ஆராய்ந்து வருகிறோம். அனைவரும் இணைந்து இந்த பொதுத்துறையை வலுப்படுத்தும் முயற்சியை மேற்கொள்வோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...