GST வரி கட்டியே மாய்ந்து போன நிலையில் நாம் இருக்கிறோம் - பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வேதனை!

கோவை பச்சாபாளையம் பகுதியில் பால்பண்ணையை திறந்து வைத்து பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், பால் கொள்முதல் விலை உயர்த்த கூறுவதில் நியாயம் இருக்கிறது. ஆனால், தற்போது அனைத்திற்கும் GST வரி கட்டியே மாய்ந்து போன நிலையில் நாம் இருக்கிறோம் என்றார்



கோவை: அனைத்திற்கும் GST வரி கட்டியே மாய்ந்து போன நிலையில் நாம் இருக்கிறோம் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பச்சாபாளையம் பகுதியில் உள்ள மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பால் பண்ணையை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின் போது அங்குள்ள இயந்திரங்களின் செயல்பாடுகள், அவற்றின் பராமரிப்பு ஆகியவற்றை குறித்து கேட்டறிந்தார். மேலும் பால் பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டிங் செய்யப்படுவதையும் ஆய்வு செய்தார்.



இந்நிகழ்வில் அங்குள்ள பணியாளர்களிடமும் அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.



அதனைத் தொடர்ந்து சிறந்த பால் உற்பத்தியாளர்கள், சங்க செயலாளர்கள், கருவூட்டுனர்கள், மற்றும் விற்பனையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



அதன்படி 124 பயனாளிகளுக்கு 2.23 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது,



ஆவின் ஒரு மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம். இதன் மூலம் பலருக்கும் நன்மைகள் உள்ளது. இத்துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.

ஆவினை பொறுத்தவரை விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும், காப்பீடு திட்டத்திலும் ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். யார் வேண்டுமென்றாலும் ஆவின் நிர்வாகிகள், அல்லது DR யை சந்தித்து பேசலாம், அவர்கள் உங்களுக்கு முறையாக வழிக்காட்டுவார்கள் என்ற உத்தரவாதத்தை இத்துறையின் அமைச்சராக நான் கூறி கொள்கிறேன்.

விவசாயிகள் தரும் பாலுக்கு விலையை கூட்டி தர வேண்டும் என கூறுவதில் நியாயம் இருப்பதை மறுக்கவில்லை. தற்போது அனைத்திற்கும் GST போட்டு வரி கட்டியே மாய்ந்து போன நிலைமையில் நாம் இருக்கிறோம்.

எங்கெல்லாம் பால் உற்பத்தியாளர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் சொசைட்டி ஆரம்பிக்கும் பணிகளை செய்ய உள்ளோம். நாம் எடுத்துள்ள முயற்சிகளால் 6% மின் கட்டணம் குறைந்துள்ளது. அனைவரையும் ஒன்றிணைத்து செல்கின்ற அரசை தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் என்று கூறுகிறார்.

ஒரு சாரார் மட்டும் பயனடைந்தார்கள் என்று இருக்க கூடாது என்பது தான் இந்த அரசின் கொள்கை. ஒப்பந்த பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் எவ்வளவு வழங்கலாம் என்பதை ஆராய்ந்து வருகிறோம். அனைவரும் இணைந்து இந்த பொதுத்துறையை வலுப்படுத்தும் முயற்சியை மேற்கொள்வோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...